ஸ்ரீ ராம் ஜோதிட மையம்

    ஸ்ரீ ராம் ஜோதிஷ மைய இணைய பக்கத்திற்கு வரவேற்கிறோம்    




       அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

       பகவான் முதற்றே உலகு - குறள்



      எல்லாம் வல்ல இறைவன் முழுமுதற்கடவுளான ஸ்ரீவிநாயகபெருமானை வணங்குகிறேன்

      ஸ்ரீபிரம்மா - ஆக்கல், ஸ்ரீவிஷ்ணு - காத்தல், ஸ்ரீசிவன் - அழித்தல் என முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளை வணங்கி, கல்விக்கு கடவுளான ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவபெருமானையும், சகலகலைகளுக்கும் அதிபதியாம் வெண்தாமரையில் வீற்றிருக்கும் வாக்குதேவதையாம் ஸ்ரீசரஸ்வதியை வணங்குகிறேன். நம்முடைய தலைவிதியை நிர்ணயிக்கும் நவக்கிரகங்களையும் நவக்கிரங்களின் அதி தேவதைகளையும் போற்றி வணங்குகிறேன். என் குலதெய்வமான நான் நாள்தோறும் என் எண்ணம் முழுவதும் நிறைந்துள்ள ஸ்ரீமன்நாராயணபெருமாளை வணங்குகிறேன். அவர் அருகிலுள்ள ஸ்ரீதேவி, பூதேவியையும் வணங்குகிறேன். என் அன்னை ஸ்ரீமஹாலட்சுமியையும் போற்றி வணங்குகிறேன்.

      என்னுடைய ஜோதிட ஆண்மீக மாந்திரிக குருநாதர்களையும் என்னை இவ்வுலகில் அறிமுகப்படுத்திய தாய் தந்தையும் வணங்கி உங்களை வரவேற்கிறேன். இந்த பூலோகத்தில் எண்ணற்ற உயிரினங்கள் பிறந்து வளர்ந்து இறக்கின்றன. அவை மனிதன் தவிர மற்ற எல்லா உயிரினங்களும் ஒரு அறிவு குறைவாக சிரிக்கும் சிந்திக்கும் பேசும் திறனோ இல்லாத ஐந்தறிவு ஜீவராசிகளாகும். ஆனால் மனித இனம் ஆறறிவு கொண்டது பேசும் திறனையும் சிந்தித்து பகுத்தறியும் திறனையும் கொண்டவராக மனிதனை இறைவன் படைத்துள்ளார். இறைவனுடைய படைப்பில் மனித படைப்பு மிக உன்னதமானது வித்தியாசமானது விசித்திரமானது. இப்படி பட்ட மனிதனுடைய வாழ்க்கையில் ஆனந்தம் மகிழ்ச்சி இன்பம் துன்பம் ஏற்றம் இரக்கம் உயர்வு தாழ்வு ஒற்றுமை வேற்றுமை போட்டி பொறாமை காழ்ப்புணர்ச்சி, காதல், காமம், இவை அனைத்தும் உண்டாகிறது. இவை எல்லாம் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் நடக்க காரணம், அவர் முன் பிறவியில் செய்த கர்ம வினையே காரணம் என்கிறது நம் ஜோதிட சாஸ்திரம்.

      நமது ஜோதிட சாஸ்திரத்தில் மூலம் ஒரு மனிதனின் முக்கால பலன்கள் அதாவது முன் ஜென்மம் ( இறந்தகாலம்) இந்த ஜென்மம் (நிகழ்காலம்) மற்றும் வரும் ஜென்மம் (எதிர்காலம்) பலன்களை அறிந்து கொள்ள முடியும். அதன் அடிப்படையில் ஒரு தனிமனிதன் தன் வாழ்க்கையில் உண்டாகக்கூடிய சுகதுக்கங்களை அறிந்து கொண்டு அதன் அடிப்படியில் வாழ்க்கையை வளம் உள்ளதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் மாற்றி வாழ முடியும் என்பது உறுதி.

       இந்த பூலோகத்தில் ஒரு மனிதன் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் காலங்களில் அவன் எவ்வளவோ பிரச்சனைகளை சந்திக்கின்றான். இப்படிபட்ட சூழ்நிலையில் இப்படிபட்ட பிரச்சனைகளில் இருந்து எல்லாம் எப்படி மீண்டு வந்து நல்வாழ்க்கை வாழ முடியும் என்பதை வழி காட்டுவதே நம் ஜோதிடம்.

       ஒரு மனிதன் என்றால் அவனுக்கு


  •    ஆயுள்
  •    ஆயுள்நல்ல ஆரோக்கியம்
  •    நல்ல கல்வி
  •    நல்ல வேலை
  •    தொழில்
  •    மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை
  •    குழந்தைபாக்கியம்
  •    சொந்தமாக வீடு
  •    வாகனம்
  •    அசையாத சொத்துக்கள்
  •    தாய், தந்தை
  •    சகோதர, சகோதரி
  •    உற்றார், உறவினர்கள்
  •    நண்பர்கள்

      இவ்வளவையும் சார்ந்தே அவனது வாழக்கை அமைந்துள்ளது. இவை பற்றி எல்லாம் விரிவாகவும் விளக்கமாகவும் தெரிந்து கொள்ள உதவுவதே நம் இந்து சாஸ்திரம் எனும் ஜோதிடம்.

       ஒரு மனிதன் அவன் போன ஜென்மத்தில் (இறந்த காலத்தில்) செய்த பாவ புண்ணியங்கள் நல்லது மற்றும் கெட்டவினைகள் அவனதுஜனனம் போன்ற விஷயங்களை குறிப்பிடும் இதிலிருந்து தீவினைகள் இருப்பின் அதிலிருந்து எப்படி விடுபட்டு நல்வாழ்க்கை வாழ வேண்டும் என்பதை ஜோதிடம் தெளிவாக குறிப்பிடும். நிகழ்காலம் இந்த ஜென்மத்தில் என்ன மாதிரியான தசாபுத்திகள் நடக்கிறது என்பதை கணித்து அதனால் உண்டாகும் நல்வினை தீவினை என்ன?அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை ஜோதிடம் தெளிவாக காட்டும். எதிர்காலம் என்பது பின்வரும் காலத்தில் என்ன நடக்கும் எப்படி நடக்கும் என்பது பற்றியும் நம் அடையும் நன்மைதீமைகளை பற்றியும் கெடுபலன்கள் பற்றியும் அதிலிருந்து நாம் செய்யவேண்டிய பரிகாரங்களை பற்றியும் இந்த ஜென்மத்திலும் மறுஜென்மத்திலும் அடையவேண்டிய நன்மைகளை ஜோதிடம் வலியுறுத்துகிறது.

       இப்படிபட்ட ஜோதிடத்தை பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஊரை வைத்து துல்லியமாக வைத்து நவீன காலமுறைக்கேற்ப ஜாதகப்படி உங்கள் வாழக்கையில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகாண நம் பாரம்பரிய முறைப்படி பலன்கள் நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியை உண்டாக்க சரியான வழிகாட்டுதலால் சொல்லபடும்.


      மேலும்


  •       திருமண பொருத்தம்
  •       வாஸ்து சாஸ்திரம்
  •       கைரேகை சாஸ்திரம்
  •       எண்கணிதம்
  •       தெய்வீகபரிகாரங்கள்

      பார்த்து சிறந்த நம்பிக்கையான வழிகாட்டுதல்களையும் உணர்ந்து வாழ்வில் முன்னேற வழி செய்துதரப்படும்.


       ஜோதிடம் - ஜோதி பிரகாசம் (அல்லது) ஒளி என்று பொருள் வான் மண்டலத்தில் பிரகாசமாக இருக்கக் கூடிய 27 நட்சத்திரங்களையும், 9 நவகிரகங்களையும், 12 ராசிகளையும் இவ்வுலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளின் மீதும் அனைத்து பொருட்களின் மீதும் ஆதிக்கத்தை செலுத்தி சுப- அசுப பலன்களை அளிக்கும் அதை கண்டறிய உதவும் தெய்வீகக்கலைஜோதிடம்.


      ஜோதிடம் ஒரு மனிதன் பிறந்ததேதி, பிறந்தநேரம், மற்றும் பிறந்தஊர், சூரியஉதயம், அட்சாம்சம், தீர்காம்சத்தை வைத்து துல்லியமாக கணித்து பார்ப்பது ஜாதகம்.


      ஜோதிடம் பார்க்க தேவையான பெயர் பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஊர், ஆணா அல்லது பெண்ணா, உங்களுடைய கேள்வியை எழுதி எங்களுக்கு அனுப்பினால் 72 மணி நேரத்தில் உங்களுடைய கேள்விக்கு சரியான பதிலை அனுப்பி வைப்போம். பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் அதற்க்கு சரியான பரிகாரம் சொல்லப்படும்.





இலவச ஜோதிடம் / Free Astrology

ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் இலவச ஜோதிடம்

For Enquiry




20

YEARS OF
EXPERIENCE

1200000

Successful
Clients

3767

Jothagam
Done

24000

Client
Live Connection